×

நினைவு நாளையொட்டிகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை, ஜன.31: காந்தியடிகள் நினைவு தினத்தை ஒட்டி காந்தி சிலைக்கு மாலை அணவித்தல், தேசியக் கொடி ஏற்றுதல், அஸ்திபீடத்தில் மலரஞ்சலி செலுததி சர்வ சமய வழிபாடு ஆகியவை நடந்தது.மதுரை காந்திமியூசியத்தில் நடந்த இந்நிகழ்ச்சிகளில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி, ஆதிகேசவலு, பவானி ஆகியோர் பங்கேற்றனர். காந்திமியூசியத்தையும் சுற்றிப் பார்த்தனர்தியாகிகள் பாலசுப்பிரமணியம், காந்திமன்ற நிர்வாகிகள் ராமச்சந்திரன், ஜோதி முருகன், தியாகிகள் சங்க வாரிசுகள், புத்தபிட்சு லீலாவதி மற்றும் மாணவ, மாணவியர், காந்திமியூசிய இயக்குநர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் காந்தியடிகள்’ என்ற புத்தகம் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சர்வசமய வழிபாடு
நடத்தப்பட்டதுகாந்தியடிகள் சுடப்பட்ட மாலை 5.20மணிக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. காந்தி நினைவு நிதி தலைவர் காமு நடராஜன், காந்திமியூசிய பொறுப்பாளர் மா.பா குருசாமி, திருச்செங்கோடு காந்தி ஆசிரம நிர்வாகி தேவராஜன், தமிழ்நாடு சர்வோதய மன்ற செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.

Tags : Memorial ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு