×

வீரகனூர் ராகவேந்திரா பள்ளி மாணவர்களுக்கு இழப்பீடு

கெங்கவல்லி, ஜன.31: வீரகனூரில் செயல்பட்டு வரும் ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில், சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பள்ளியின் சார்பில் காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 4ம் வகுப்பு படித்து வரும் பிரித்திஷ் சர்மா, 6ம் வகுப்பு படித்து வரும் ரிஷிவந்தினி ஆகியோரது தந்தை, கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்களின் நலன் கருதி, ஸ்ரீ ராகவேந்திரா அறக்கட்டளை, காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தலா ₹2 லட்சம் வீதம் ₹4 லட்சத்திற்கான காசோலையை, பள்ளியின் தலைவர் அருள்குமார், செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜா, கல்வி ஆலோசகர் இளையப்பன், வெங்கடாஜலபதி ஆகியோர் வழங்கினர். அதனை மாணவர்களின் தாயார் ராஜாமணி பெற்றுக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி