×

இளம்பிள்ளையில் உயர்மின் கோபுர விளக்கு திறப்பு

இளம்பிள்ளை, ஜன.31:  இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் மாலை முதல் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். இதனால், அப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று சேலம் பன்னீர்செல்வம் எம்.பி. ₹3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதன்மூலம் அப்பகுதியில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை வகித்து உயர்கோபுர மின் விளக்கினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். விழாவில் மனோன்மணி எம்எல்ஏ, அதிமுக நிர்வாகிகள் வருதராஜ், துளசிராஜன், பழனிசாமி, சாந்தி, சிவக்குமார், பிரபாகரன், முருகன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : opening ,lighthouse ,town ,
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா