×

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர், ஜன.30:  திருப்பூரில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பு அளித்தது.  திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் காதர் ஜெய்லானி (32). இவர் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கன்னியாகுமரிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார், ஜெய்லானி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வந்தனர்.  இதுகுறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோரட்டில் நடந்து வந்தது. இதன் இறுதிகட்ட விசாரனை நேற்று மகிளா கோர்ட் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிக்கு சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ஏக காலத்தில் அனுபவிக்கவும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.இதையடுத்து குற்றவாளி அப்துல்காதர் ஜெய்லானி  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : jail ,adolescents ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!