×

ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன. 30: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் பேருந்து நிலையம் முன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், தொமுச மாவட்ட தலைவர் குருநாதன், செயலாளர் மகாதேவன், பொருளாளர் தமிழரசன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

Tags : trade unions ,
× RELATED தமிழ்நாட்டின் அனைத்து...