×

ஆதனக்கோட்டை பகுதியில் குளத்தின் கரையை பலப்படுத்தும் பணியில் பெண்கள் மும்முரம்

கந்தர்வகோட்டை, ஜன.30: கந்தர்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வேலை பார்த்து வந்தனர். ஆதனக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சர்க்கரிக்குளத்தை நேற்று நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் பெண்கள் தூர்வாரி கரையை பலப்படுத்தினர். ஒரே சமயத்தில் பலபெண்கள் பணியாற்றி வந்தததால் அந்த பகுதியில் சென்ற சுற்றுலா பயணிகள்  புகைப்படம் எடுத்து சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் நூறு நாள் வேலை திட்டத்தில் பெண்கள் வேலை பார்த்து வந்ததை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.

Tags : Women ,area ,Atanakottai ,pond ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ