×

விராலிமலை அருகே மூடியிருந்ததால் பள்ளி வராண்டாவில் பாடம் நடத்திய முன்னாள் மாணவர்கள்

விராலிமலை, ஜன.30: விராலிமலை அருகே அரசு பள்ளி திறக்க படாததால் முன்னாள் மாணவர்கள் பள்ளி வராண்டாவில் பாடம் நடத்தினர். விராலிமலை அருகே மாதுராப்பட்டியில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின் றனர். கடந்த 22ந்தேதி முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரி க்கைகளை வழியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் விராலிமலை அருகே உள்ள மாதுராப்பட்டியில் பள்ளி திறக்க படாத தால் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சிலர் நேற்று பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்தினர். நேற்று 58 மாணவ, மாணவி கள் வந்த நிலையில் பள்ளி கட்டிட வகுப்பு அறை திறக்கப்படாத  நிலையில் பள்ளியில் வராண்டாவில் பாடங்களை நடத்தினர். இப்பகுதியை சேர்ந்த சிலர் உதவியால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது. விராலிமலை அருகே முன்னாள் மாணவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தியதால் இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பாராட்டினர்.

Tags : Alumni ,school ,Vandana ,Viralimalai ,
× RELATED 22 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு