×

நெரூர் பகுதிகளில் பனி காரணமாக கோரை அறுவடை பாதி

கரூர்,ஜன.30: பனி காரணமாக கோரை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் என்புதூர், வாங்கல், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம் தோட்டக்குறிச்சி, நெரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கோரைசாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக கடும் பனிப்பொழிவு காரணமாக கோரை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை பருவம் வந்த நிலையில் கஜாபுயல் காரணமாக பாதிப்பை தொடர்ந்து தற்போதும் அந்த நிலைதொடர்கிறது.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,, தற்போது திருமண சீசனை எதிர்பார்த்து கோரை பாய்கள் அதிகம் விற்பனை ஆகும்என்பதால் பணிகளை செய்து வந்தோம், பாய்க்கு கிராக்கி உள்ள சமயத்தில் இவ்வாறு இயற்கை பாதிப்பினால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது  எ்ன்றார்.

Tags : areas ,Nerur ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...