×

4 பைக், ஆட்டோ தீவைத்து எரிப்பு : சைக்கோ கைவரிசையா?

வேளச்சேரி: பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கோபிநாத் (30), அருள்மணி (30). இவர்கள் தங்களது பைக்குகளை நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியில் நிறுத்தியிருந்தனர். நேற்று அதிகாலை பைக்குகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் 2 பைக்குகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக பைக்குகளுக்கு தீவைக்கப்பட்டதா, அல்லது சைக்கோ கைவரிசையா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: அடையாறு, தாமோதரபுரம், எல்லையம்மன் கோயில் தெருவில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, 2 பைக்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் திருவான்மியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் 3 வண்டிகளும் எரிந்து நாசமானது. இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...