தென்காசி, ஜன. 30: ஆய்க்குடி ஜெ.பீ. பொறியியல் கல்லூரியில் ஜம்னா நிறுவனம் சார்பில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேர்முக வளாகத்தேர்வு நடந்தது. இதில் 8 பேர் தேர்வு பெற்றனர். நேர்முக வளாகத் தேர்வை ஜம்னா நிறுவன மனிதவள மேலாண்மை அதிகாரி ரவி நடத்தி மாணவர்களை தேர்வு செய்தார். இதில் இக்கல்லூரியை சேர்ந்த மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் சார்லஸ், வர்க்கீஸ் விஜய், அலெக்ஸ்பாண்டி, விர்ஜின், சேதுராஜ், குமார், அரவிந்த், ஆன்டன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்களுக்கு ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை கல்லூரியின் நிர்வாகி பிரதீபா, முதல்வர் ராஜ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்புத்துறை அதிகாரி பிரான்சிஸ் டஸ்னிக் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.