×

அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அனைத்து தொழிற்சங்கத்தினர் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜன.30: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் கடந்த 22ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வரும் தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்ட செயலாளர் சிவராமன், எல்.பி.எப். பிரசார செயலாளர் கருப்பசாமி, ஐ.என்.டி.யு.சி. மாநில செயல்தலைவர் கதிர்வேல், சி.ஐ.டி.யு.மாநில செயலாளர் ரசல், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தொ.மு.ச. தூத்துக்குடி நகர கிளை செயலாளர் மரியதாஸ், பொருளாளர் சற்குணம், துணை செயலாளர் கருப்பசாமி, ராமசாமி, புறநகர் கிளை செயலாளர் சந்திர சேகரன், பொதுக்குழு உறுப்பினர் கல்யாணசுந்தரம், விளாத்திகுளம் கிருஷ்ணமூர்த்தி, வைகுண்டம் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : unions ,government employees ,Thoothukudi ,
× RELATED அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி...