×

சாலை மறியலில் ஈடுபட்ட 87 பேர் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை, ஜன.29:புதுக்கோட்டை சாலை மறியலில் ஈடுபட்ட 87 ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் பகுதியில் நேற்று காலையில் சாலை மறிய லில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 2,566 பேரை கைது செய்து புதுக்கோட்டையில் உள்ள 9 திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இதில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மணிகண்டன், செல்வராஜ், கண்ணன், குமரேசன், தியாகராஜன், சக்திவேல் உள்பட 87 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : road blocking ,
× RELATED ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில்...