×

மூதாட்டியை வெட்டியவர் கைது

வேதாரண்யம், ஜன.29:  வேதாரண்யம் அருகே மூதாட்டியை அரிவாலால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.வேதாரண்யம் பகுதி தோப்புத்துறை துள்ளுவெட்டி ஐய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவரும் அதே தெருவை சேர்ந்த அன்பழகனும் அதேபகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மதுஅருந்தினர். அப்போது பாலமுருகன் பையில் இருந்த ரூ.500ஐ அன்பழகன் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் பாலமுருகன் அன்பழகன் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதை பார்த்த அன்பழகனின் தாயார் முத்துலெட்சுமி (60), அவரது மகள் வசந்தா இருவரும் சேர்ந்து பாலமுருகனை தரக்குறைவாக பேசி சாணம் கலந்த தண்ணீரை பாலமுருகன் மீது வீசினர்.
இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன் அரிவாலால் முத்துலெட்சுமியை வெட்டினார். அப்போது வசந்தாவிற்கும் அடி விழுந்தது.  படுகாயம் அடைந்த முத்துலெட்சுமி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
முத்துலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags : anchor ,
× RELATED தொகுப்பாளராக மாறிய போர்ன் ஸ்டார் !