×

நாகை - நாகூர் சாலையில்வேலை கேட்டு மறியல் செய்த பெண்கள் உள்பட 60 பேர் கைது

நாகை, ஜன.29: நாகை-நாகூர் சாலையில் வேலை கேட்டு மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.நாகை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்தியா முழுவதும் இளைஞர்கள், தனது இளமை காலங்களில் வேலை தேடி வருகின்றனர். இதன்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 84.19 லட்சம் பேர் வேலை கேட்டு காத்திருக்கின்றனர் என்று கூறி எனது வேலை எங்கே என்று கேட்டு நாகையில் அவுரித் திடலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் அதன் அருகே பப்ளிக்ஆபீஸ் ரோட்டில் நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். சாலை மறியல் செய்த மாவட்ட செயலாளர் சிங்காரவேலன், மாநில குழு சியேமலா, மாவட்ட துணைத் தலைவர் வடிவேல், மாவட்ட குழு உறுப்பினர் நன்மாறன், சந்திரகுமார், ஜோதிநாதன், சதீஸ் 10 பெண்கள் உள்ளிட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 


Tags : women ,road ,Nagore ,Nagapattinam ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...