×

28 சவரன், ரூ.1 லட்சம் கொள்ளை

பூந்தமல்லி, ஜன.29: போரூர்  அருகே இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை  அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.   சென்னை  போரூரை அடுத்த  சமயபுரம், 9 வது தெருவை சேர்ந்தவர் பால தண்டாயுதம்(74).  இவர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆய்வு கூடங்களுக்கு கெமிக்கல்  மற்றும் உபகரணங்களை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது  மனைவி  மணிமேகலை (68), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை.

நேற்று முன் தினம்  இரவு இருவரும் அறையில் தூங்கச் சென்று விட்டனர். காலையில் எழுந்து  பார்த்தபோது மற்றொரு அறையில் இருந்த பீரோவிலிருந்த துணிகள் எல்லாம்  சிதறிக்கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது  நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு  இருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை  சோதனை செய்தனர். இதில் மாடி வழியாக  வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், ரூ 1  லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

Tags : sovereign ,robbery ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...