×

டாஸ்மாக் கடை சூபர்வைசர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் - ஜோலார்பேட்டை அருகே ₹15 லட்சம் கையாடல்

வேலூர், ஜன.29: ஜோலார்பேட்டை அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையான தொகை ₹15 லட்சத்தை கையாடல் வழக்கில் சூபர்வைசர், சேல்ஸ்மேன்கள் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட மேலாளர் உத்தரவிட்டார்.வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அருகே உள்ள சின்னமூக்கனூர் கூட்ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில், சூபர்வைசராக ஜம்மனபுதூர் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவரும், சேல்ஸ்மேன்களாக கார்த்திகேயன், செல்வகுமார் ஆகியோரும் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட மேலாளர் புஷ்பலதா, சின்னமூக்கனூர் டாஸ்மாக் கடையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, கடையில் இருந்த சூபர்வைசர் உமாபதி, சேல்ஸ்மேன்கள் கார்த்திகேயன், செல்வகுமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். கடையில் கணக்குகளை ஆய்வு செய்தபோது, ₹15 லட்சத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் சூபர்வைசர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டாஸ்டாக் கடை கணக்கில் ₹15 லட்சம் கையாடல் செய்த சூபர்வைசர் உமாபதி, சேல்ஸ்மேன்கள் கார்த்திகேயன், செல்வகுமார் ஆகிய 3 பேரை வேலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராம்சந்தர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : Tasmuk ,Shop Superbiazar ,Suspende-Jolarpet ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை...