×

ஊத்தங்கரை அருகே விபத்து கிணற்றில் பாய்ந்த பைக் விவசாயி பரிதாப சாவு

ஊத்தங்கரை, ஜன.25:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடி பிள்ளையார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன்(50). விவசாயியான இவர், அதே பகுதியில், சுப்ரமணி என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் தோட்டத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். விவசாய நிலத்தில் இருந்த கிணற்றை ஒட்டி சென்றபோது, டூவீலருடன் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு, கிணற்று தண்ணீரில் அன்பழகன் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், மீட்பு பணியை துரிதப்படுத்தினர். அதற்குள் அன்பழகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். இதையடுத்து, சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : crash bite ,Uthangarai ,
× RELATED ₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது