×

அணைக்கட்டு அருகே டாஸ்மாக் கடையில் பீர் பாட்டில் வெடித்து சேல்ஸ்மேன் படுகாயம்

வேலூர், ஜன.25: அணைக்கட்டு அருகே டாஸ்மாக் கடையில் இருந்த பிரிட்ஜை திறந்தபோது அதிலிருந்த பீர்பாட்டில் வெடித்தது. இதில் சேல்ஸ்மேன் படுகாயமடைந்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த குருவராஜபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இக்கடையில் சேல்ஸ்மேனாக பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் இருந்தார். அப்போது ஒரு பீர் கேட்டதால் பிரிட்ஜை திறந்து பீர் பாட்டிலை எடுத்தார்.

அப்போது திடீரென பீர் பாட்டில் வெடித்தது. இதில் சேல்ஸ்மேன் பாபுவுக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு மது வாங்க காத்திருந்த குடிமகன்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Chelsea ,Tasmask ,dam ,shop ,
× RELATED கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை...