×

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

செங்கம், ஜன.25: செங்கம் அடுத்த மணிக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.செங்கம் அடுத்த மணிக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு தாசில்தார் சங்கரன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். விஏஓ ரஞ்சித் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேந்திரன் கலந்து கொண்டு 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை தாசில்தார் முனுசாமி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் நேரு நன்றி கூறினார்.

Tags : daytime camps ,
× RELATED மிருகண்டா அணையில் இருந்து வினாடிக்கு...