×

இறந்த காவலர்களின் வாரிசுகள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் விஏஓ பணி

திருச்சி, ஜன.25:  திருச்சி மாவட்டத்தில் காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த ஏழு பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விஏஓ பணிநியமன ஆணை நேற்று வழங்கப்பட்டது.திருச்சி மாநகர பாலக்கரை போலீஸ் நிலைய ஏட்டு மகாலிங்கத்தின் வாரிசுதாரரான வனிதா, மாநகர ஆயுதப்படை இரண்டாம் பிரிவு காவலர் சண்முகவேலாயுதம் வாரிசு தனபாண்டி, மணப்பாறை போலீஸ் நிலைய ஏட்டு சிவராமன் வாரிசு ஆறுமுக பிரபு, திருவெறும்பூர் போலீஸ் நிலைய ஏட்டு கருப்பையா வாரிசு திவாகரன், மாவட்ட எஸ்பி அலுவலக கண்காணிப்பாளர் குணசேகரன் வாரிசு கார்த்திகேயன், ராம்ஜிநகர் போலீஸ் எஸ்எஸ்ஐ பாலையன் வாரிசு வீரசங்கர், மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலைய ஏட்டு ஆபிரகாம் வாரிசு ஜீவாமேரி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் வருவாய்த்துறையில் விஏஓ பணிநியமன ஆணையை திருச்சி கலெக்டர் ராஜாமணி நேற்று வழங்கினார்.




Tags : guards ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ