×

மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி

திருச்சி, ஜன. 25: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் ஊர்வலம் இன்று (25ம் தேதி) காலை 10 மணியளவில் கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் தொடங்கி மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் வரை சென்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. மாலை மலைக்கோட்டை சறுக்குபாறை அருகில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை அனைத்து அணி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுபோல் திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ரத்தினவேல் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் இன்று (25ம் தேதி) காலை 9 மணிக்கு திருச்சி கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதில் அதிமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.


Tags : municipality ,linguists ,suburbs ,martyrs ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு