முத்துப்பேட்டை, ஜன.25: முத்துப்பேட்டை சுங்கத்துறை சார்பில் சிவிஜில் எனும் கடத்தல் மற்றும் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
முத்துப்பேட்டை சுங்கத்துறை மற்றும் கடத்தல் பிரிவு கண்காணிப்பாளர் தெனாலி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் கேசவன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் முத்துப்பேட்டை கடலோர மற்றும் கிழக்கு கடற்கரை சாலை, அதேபோல் அதிராம்பட்டிணம், மல்லிப்பட்டினம், மனோரா ஆகிய பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல கிழக்கு கடற்கரை சாலையிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.