×

சீர்காழியில் பூட்டியே கிடந்த சிறைச்சாலை செயல்பட துவங்கியது

சீர்காழி, ஜன.25: சீர்காழியில் கிளைச்சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த கிளைச் சிறைச்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.ஆனால் பணிகள் முடிந்து 2 ஆண்டுகளை கடந்தும் கிளைச் சிறைச்சாலை திறக்கப்படவில்லை. இதனால் சீர்காழி பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்களை சீர்காழி கிளைச் சிறைச்சாலையில் அடைக்க முடியாமல் திருச்சி, மயிலாடுதுறை, பொறையார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறைச் சாலைகளில் அடைத்து வந்தனர். இதனால் போலீசாருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தனர். சீர்காழி கிளைச் சிறைச்சாலையை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும்கோரிக்கை விடுத்தனர்.  இந்நிலையில் கடந்த 10ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் சீர்காழி கிளைச்சிறையை திறந்து வைத்தார். ஆனால் கிளைச் சிறைச்சாலை செயல்பாட்டுக்கு இல்லாமல் பூட்டி கிடந்தது. இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த 23ம் தேதி படத்துடன் வெளியானது. இதனை தொடர்ந்து திருச்சி சிறைத்துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் புதுக்கோட்டை சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிர்யதர்ஷினி ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை திறக்கப்பட்டு, சிறைத்துறை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் 13 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். திறக்கப்படாமல் இருந்த சிறைச்சாலை தொடர்பாக செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கும் அனைத்து தரப்பினரும் நன்றியையும், பாராட்டுதலையும்
தெரிவித்துள்ளனர்.





Tags : jail ,gorge ,
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!