சிவகிரி, ஜன. 25: வாசுதேவநல்லூர் 10வது வார்டு பூஜைமடம் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்புவிழா நடந்தது. மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்து அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். வாசுதேவநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) வெங்கடகோபு முன்னிலை வகித்தார். குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் தங்கம்மாள் வரவேற்றார். விழாவில் எம்ஜிஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளர் சவுக்கை வெங்கடேசன், அதிமுக ஒன்றியச் செயலாளர் மூர்த்திப்பாண்டியன், ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சாமிவேல், நகரச்செயலாளர் குமரேசன், ஒன்றிய அவைத்தலைவர் முகம்மது உசேன், ஜெ பேரவை முருகையா, மாங்கனி முருகன், நகரப்பொருளாளர் திவான் மைதீன், நகர அவைத்தலைவர் நீராவி, வார்டு செயலாளர் ஜெய்பாக்கியா முருகையா, உள்ளார் மூர்த்தி, அங்கன்வாடி ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்கள் நாச்சியார், ஜீவமணி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் மாடசாமி, கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.