×

நாட்டுக்கோழிகளுக்கு மூலிகை மருத்துவம்

நாமக்கல், ஜன. 24: நாமக்கல்  திருச்சி சாலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோழிகளுக்கான மரபுசார்  மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், வரும் 29ம் தேதி மதியம் 1.30 மணியளவில்  நாட்டுக்கோழிகளில் ஏற்படும் நோய் பாதிப்புகளை முலிகை மருத்துவத்தின் முலம்  தடுக்கும் முறைகள் குறித்து, ஒரு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.இதில்  நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், மற்றும் பண்ணை  அமைத்துள்ளவர்கள் பங்கேற்று பயனடையலாம் என, ஆராய்ச்சி மையத்தின் தலைவர்  கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Tags : countryside ,
× RELATED அக்.2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று...