காரிமங்கலம், ஜன.24:காரிமங்கலத்தில், டேங்க் ஆபரேட்டர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வேடியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் ஊதியம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்தல், காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்தது தொடர்பாக 2017-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்துதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.