×

மனைவியுடன் பழகியதை கண்டித்த மதபோதகருக்கு அரிவாள் வெட்டு

நத்தம், ஜன. 24: நத்தத்தில் மனைவியுடன் பழகியதை கண்டித்த மதபோதகரை அரிவாளால் வெட்டிய ஜேசிபி டிரைவரை போலீசார் கைது செய்தனர்
நத்தம் ராக்காச்சிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (33). கிறிஸ்தவ மதபோகர். இவரது மனைவி பிரியா (30). சேர்வீடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (29). ஜேசிபி டிரைவர். இவருக்கும், பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை பாலமுருகன் கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சரவணன், நேற்று முன்தினம் இரவு ஜெபக்கூடத்தில் இருந்த பாலமுருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் பாலமுருகனின் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதனையடுத்து சரவணன் அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்ததும் நத்தம் போலீசார் பாலமுருகனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்தார்.

Tags : clergy ,
× RELATED குருமூர்த்தியிடம் பலரும் கருத்து...