×

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

ஜெயங்கொண்டம், ஜன.24:  ஜெயங்கொண்டம் அருகே இந்துக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், ஜெயங்கொண்டத்தில்  ஆக்கிரமிப்பில் உள்ள இந்துக்களின் மீனாம்படி சுடுகாட்டை பார்வையிட்டார். பின்னர் அவர்  நிருபர்களிடம் தெரிவித்ததாவது:காட்டில் சுற்றி கம்பி வேலி (அ) காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாக்க  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிறிஸ்தவ சபையை அந்த இடத்தை விட்டு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். கிறிஸ்தவ சபையை  சேர்ந்தவர்கள் வீடுகள் கட்டுவதற்கு என இடத்தை உரிமையாளர்களிடம் வாங்கி  அதில் உரிய அனுமதியின்றி கிறிஸ்தவ சபையை அமைத்து அதனை நடத்தி வருகின்றனர்.  மேலும் அவர்களுக்கு அமைக்கப்பட்ட தார்சாலையில் செல்லாமல் சுடுகாட்டு பாதையை  கிறிஸ்தவ சபையை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல்  கூவத்தூரில் கிறிஸ்தவ சபையை  கோயில் அருகே அமைந்திருப்பதை உடனே அப்புறப்படுத்த வேண்டும். எனவே இந்த 2 கிறிஸ்தவ சபைகளையும் அப்புறப்படுத்த  வேண்டும். அவ்வாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில்  ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என்றார்.

Tags : cemetery ,
× RELATED திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி...