×

மின்கம்பியில் உரசி லாரி தீப்பிடித்தது

திருப்பூர், ஜன.24:  திருப்பூர் அருகே சோளத்தட்டை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.திருப்பூர் அருகே நேற்று இரவு முதலிபாளையத்தில் இருந்து காங்கயம் நோக்கி தனியாருக்கு சொந்தமான லாரி ஒன்று சோளத்தட்டு லோடு ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது, மின்கம்பியில் சோளத்தட்டு உரசி தீப்பற்றியதாக கூறப்படுகிறது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவி எரிய துவங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் அலறியடித்து லாரியிலிருந்து இறங்கி ஓடினார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு 2 வண்டிகளில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் லாரியின் பெரும்பாலான பகுதி தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...