×

கொடியேற்றத்துடன் கந்தூரி விழா துவக்கம்

நாகை, ஜன.24:நாகையை அடுத்த மேல நாகூரில் ஹலரத்செய்யதுக்வாஜா மஹ்தூம் ஹலரத் செய்பிதா பீபி பார்த்திமா தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாலை கொடி ஏற்றத்துடன் கந்தூரி விழா தொடங்கியது. தர்காஷரீப் செயலாளர் செய்யது முகமதுயூசுப் சாகிபு தலைமை வகித்தார். விழாவையெட்டி அன்று மாலை ராத்வாக தலைவர் சுல்தான கபீர்சாகிபு துவா ஓதினார். அதைத் தொடர்ந்து கொடி ஏற்பட்டது. அதை தொடர்ந்து தர்காவில் உள்ள செய்யதுக்வாஜாமஹ்தூம் சமாதிக்கு சந்தனம் பூசப்பட்டது பின்னர் துவா ஓதப்பட்டது. இதில் மேலநாகூர் நாகூர், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Kanthuri Festival ,
× RELATED கந்தூரி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்