கரூர், ஜன.24: தலித் விடுதலை இயக்கம் தேசிய பொதுசெயலாளர் பாண்டியன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினரை கரூர் அருகே நெரூரில் இருந்து வாங்கல் செல்லும் வழியில் முனியப்பனூர் என்ற இடத்தில் தனியார் செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக வைத்துள்ளனர். இங்கு வேலை செய்து வந்த சேகர் என்பவருக்கு இடுப்பு ஒடிந்து படுத்த படுக்கையாக உள்ளார். சொந்த ஊருக்கு அனுப்பவேண்டும் என கேட்டும் அனுப்பாமல் தொடர்ந்து வேலைவாங்கி வருகின்றனர். இந்நிலையில் வெளியில் வந்து புகார் கொடுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். எனவே போர்க்கால அடிப்படையில் அவர்களை மீட்டு விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில்
அவர் குறிப்பிட்டுள்ளார்.