×

பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்கக் கோரி காஞ்சி எஸ்பி அலுவலகம் முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி

காஞ்சிபுரம், ஜன.24: குடும்பத் தகராறில் பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி இளைஞர் ஒருவர் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரைச் சேர்ந்தவர் பாபு (35). அவர் செய்யாறில் உள்ள புதிய காஞ்சிபுரம் சாலையில் வசித்து வருகிறார். இவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் இளநகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகும் பாபு எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் பாபுவின் மனைவி கணவரிடம் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டார்.  இதனால் மனம் உடைந்த பாபு நேற்று பகல் 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலத்துக்கு வந்தார். எஸ்பி அலுவலகம் எதிரில் வந்த பாபு, கையோடு தான் எடுத்து வந்த பெயிண்ட் தின்னரை தனது உடம்பில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீசார் இதனைப் பார்த்து அவரைப் பிடித்து அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : office ,Kanchi SSP ,departure ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...