×

வனதுர்கை சித்தர் பீடத்தில் ஜோதி தரிசனம்

செய்யூர், ஜன 24: ஆட்டுப்பட்டி கோட்டைபுஞ்சை கிராமத்தில் வீற்றிருக்கும் வன துர்கை சித்தர்பீடத்தில் தை மாதத்தையொட்டி தைப்பூச ஜோதி நிகழ்சி  நடந்தது. கடந்த 21ம் தேதி  காலை சித்தரின் பீடத்தில் ஜோதி ஏற்றப்பட்டது. அன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் ஜோதி பூஜையின் போது வனதுர்கை சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து சித்தரின் திருவீதியுலா நடந்தது. இவ்விழாவைக் காண சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வனதுர்கை தாசன் செய்திருந்தார்.

Tags : Jyoti ,Siddhartha ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை