×

மணமேல்குடி அருகே மாயமான மீனவர் சடலமாக மீட்பு

மணமேல்குடி, ஜன.23: மணமேல்குடி அருகே மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.மணமேல்குடி அடுத்த பொன்னகரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீரங்கம் மகன் பிரபு தேவா(25). கடந்த 2 நாட்களுக்கு முன் தனது நாட்டுப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவர் மீண்டும் கரை திரும்பவில்லை. இதனால் பதறிப்போன உறவினர்கள் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் ராஜ்குமார் தலைமை யிலான போலீசார் ரோந்து படகின் மூலம் கடலுக்குள் சென்று தேடி பார்த் தனர். அப்போது நாட்டுப்படகு மட்டும் 2 மைல் தொலைவில் தனியாக கிடந்தது. போலீசார் வெகுநேரம் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை பொன்னகரத்திலிருந்து சுமார் 3 மைல் தொலைவில் தேவா பிணமாக மிதந்தார். உடனே மீனவர்களும், போலீசாரும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர் இறந்ததால் பொன்னகரம் பகுதி மீனவர்கள் சோகத்தில் மூழ்கினர். மேலும் துக்க அனுசரிக்க அந்தப்பகுதி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags : fisherman ,Manamkuldi ,
× RELATED திருவனந்தபுரம் தொகுதியில் மீனவர்கள்...