×

திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் தாயார் உடலுக்கு திமுகவினர் அஞ்சலி

திருவாரூர், ஜன. 23: திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் தாயார் உடலுக்கு முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு மற்றும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக ஏற்கனவே இருந்து வந்த மறைந்த பூண்டி கலைச்செல்வன் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் மற்றும் பூண்டிகலையரசன் ஆகியோரின் தாயாரும் மறைந்த பேரூராட்சி திமுக செயலாளர் கிருஷ்ணசாமியின் மனைவியுமானவர் நீலோத்பலாம்பாள் (84). இவர் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் கொரடாச்சேரி அருகிலுள்ள நாலில்ஒன்று கிராமத்தில் உள்ள வீட்டில் இறந்தார்.

இதனையடுத்து அவரது உடலுக்கு நேற்று தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் நேரு, மதிவாணன் மற்றும் முன்னாள் எம்.பி விஜயன்,  எம்எல்ஏக்கள் சுப்ரமணியன்,  டி.ஆர்.பி ராஜா, துரைசந்திரசேகரன், ஆடலரசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், கலியபெருமாள், தேவா, குமரேசன், பாலாஞானவேல், மனோகரன், நகர செயலாளர்கள் பிரகாஷ், காதர்உசேன் மற்றும் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தேசபந்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் மற்றும் தொ.மு.ச மாவட்ட கவுன்சில் தலைவர் குருநாதன், செயலாளர் மகாதேவன், பொருளாளர் தமிழரசன் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.கவினர் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சி  பிரமுகர்கள்  அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மாலையில்  அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள இடுகாட்டில் இறுதி சடங்குகள் நடைபெற்றன.

Tags : Pundigalivananan ,devotee ,Thiruvarur ,
× RELATED மேகமூட்டமும், சாரல் மழையும் இருந்தது...