×

ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிரான பிரசார பயணம் துவக்கம்

திருத்துறைப்பூண்டி, ஜன.23: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருக்காரவாசலில்  ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில்  வாகனப்பிரசார பேரணி துவங்கியது. திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில்  துவங்கிய பேரணியை  வர்த்தகசங்கதலைவர் செந்தில்குமார் தலைமையில், முன்னாள் நகர்மன்றதலைவர் பாண்டியன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார் வரவேற்றார்.மாநிலதலைவர் புண்ணியமூர்த்தி மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், மாநில துணை செயலாளர் செந்தில்குமார்,  உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டநிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.


Tags : propaganda trip ,
× RELATED பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பைக்கில் நின்று கொண்டே நூதன பிரசார பயணம்