வத்திராயிருப்பு, ஜன. 23: வத்திராயிருப்பு அருகே, ராமசாமியாபுரம் ஊராட்சியில், துப்புரவு பணியாளர் இல்லாததால், சுகாதாரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாறுகால்களில் கழிவுநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரம் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஓராண்டாக துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், சுகாதாரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.ஊரின் தெற்கில் உள்ள ஒடையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதில், கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. பொதுமக்களுக்கு அடிக்கடி காய்ச்சல் உருவாகி, சுகாதாரத்துறை முகாமிட்டு ஊசி, மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றனர். துப்புரவு பணியாளர் இல்லாததால், தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. போதிய வாறுகால் வசதியும் இல்லை. இருக்கிற வாறுகால்களும் தூர்வாரப்படாமல் கழிவுநீர் தேங்குகிறது. மேலத்தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கான மோட்டார் சுவிட்ச் பாக்ஸில் வயர்கள் தொங்குகின்றன. இதனால், தண்ணீர் தேவையான நேரங்களில் சுவிட்ச் போடுவதற்கு பெண்கள் தயங்குகின்றனர்.சாவடித் தெருவில் ஆழ்துளை கிணறு குழாய்களை வெளியே எடுத்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. அதனை இதுவரை சீரமைக்கவில்லை. அப்பகுதி பொதுமக்கள் தண்ணீருக்கு அவதிப்படுகின்றனர். குடிநீர் தொட்டியில் மூடி இல்லாததால், குப்பைகள் விழுகின்றன. இந்த தெருவில் குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. மேலும், வாறுகால்களையும் தூர்வாருவதில்லை.
எனவே, ராமசாமியாபுரம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். தெருக்களில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற வேண்டும். குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். தெற்கே உள்ள ஓடையை தூர்வார வேண்டும். பைபாஸ் சாலையில் உள்ள குப்பையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
உழவர் சந்தை
விருதுநகர்
(கிலோ, ரூபாய் மதிப்பில்)
கத்தரி 46
வெண்டை 36
தக்காளி 26
பச்சை மிளகாய் 35
அவரை 40
பாகற்காய் 66
கருணை 34
சின்னவெங்காயம் 35
பல்லாரி 22
இஞ்சி 95
கொத்தமல்லி 36
கறிவேப்பிலை 45
புதினா 28
கீரை 16
முருங்கைக்காய் 80
எலுமிச்சை 75
உருளைக்கிழங்கு 28
முட்டைக்கோஸ் 22
காரட் 30
பீட்ரூட் 25
முருங்கைபீன்ஸ் 52
பட்டர்பீன்ஸ் 120
சோயாபீன்ஸ் 110
பாராபீன்ஸ் 26
காலிபிளவர் 34
சவ்சவ் 25
நூல்கோல் 33
டர்னிப் 33
முள்ளங்கி 24