×

வேன்-டிராக்டர் மோதலில் ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்

ராஜபாளையம், ஜன. 23: ராஜபாளையத்தில் டிராக்டருடன் வேன் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.கேரள மாநிலம் மூணாறைச் சேர்ந்த ராஜாமுகமது, தமது குடும்பத்தினர் 11 பேருடன், நெல்லை மாவட்டம் தென்காசியில் நடந்த நிச்சயதார்த்த விழாவில் நேற்று கலந்து கொண்டனர். விழா முடிந்து மணமகளுடன்அனைவரும் ராஜபாளையம் வழியாக மூணாறுக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். ராஜபாளையத்தில் உள்ள மதுரை ரோட்டில், விறகு லோடு ஏற்றிய டிராக்டர் மீது வேன் மோதியது. பின்னர் எதிரே வந்த மதுரை-செங்கோட்டை பஸ் மீது உரசியது.இந்த விபத்தில் வேனில் இருந்த ராஜாமுகமது, அவரது மனைவி ரெஜினா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், ராஜாமுகமது சிகிச்சை பலனின்றி இறந்தார்.மேலும், பாபு மற்றும் வேனில் இருந்த மணமகள் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : van-tractor clash ,
× RELATED வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா