×

தஞ்சையில் 29ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சை, ஜன. 23:  தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 29ம் தேதி நடக்கிறது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் புதிய வேளாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்ட கலைத்துறை போன்ற விவசாயம் சார்ந்த கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை அன்றைய தினம் காலை 9 முதல் காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அதிராம்பட்டினம் பகுதியில் கடலோர பாதுகாப்பு  ஒத்திகை


Tags :
× RELATED பேரூராட்சி இயக்குனர் ஆய்வு