×

பத்திரிக்கையில் உறவினர் பெயர் போடாததால் இளம்பெண் தற்கொலை

உத்தமபாளையம், ஜன.23தேவாரத்தில் காதணிவிழா அழைப்பிதழில் பெயர்கள் போடுவதில் ஏற்பட்ட மனக்கசப்பால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தேவாரம் சி.எஸ்.ஐ.தெரு 16வது வார்டை சேர்ந்தவர் கோபிநாத் இவர் டிரைவராக வேலை செய்கிறார். இவரது மனைவி மீனா(30), இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தையும், 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த மாதம் காதணிவிழா நடத்த முடிவுசெய்யப்பட்டது. இதற்காக பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டது. இதில் மீனாவின் உறவினர்கள் பெயர் சில விடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை பற்றி கணவரிடம் மீனா கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடைய மனக்கசப்பு உண்டாகி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மீனா தைலத்தை எடுத்து குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்கு தேனிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். சம்பவம் பற்றிய புகாரின் அடிப்படையில் தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : relative ,
× RELATED ஓசூர் சார்பதிவாளர் ஆபீசில் விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு: ரூ.5 லட்சம் பறிமுதல்