×

புயல் நிவாரணம் வழங்ககோரி துறையூரில் மக்கள் சாலை மறியல்

தஞ்சை, ஜன. 23: கஜா புயல் நிவாரணம் வழங்ககோரி தஞ்சை அருகே துறையூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த துறையூரில் உள்ள அம்பலக்காரத்தெரு, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை கல்யாணஓடை பாலத்தில் மறியல் ேபாராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி