×

திருமலை ரெட்டிப்பட்டிக்கு குடிநீர் சப்ளை வழங்க வேண்டும் - ஆணையரிடம் மனு

தோகைமலை, ஜன.23: தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி திருமலை ரெட்டிபட்டிக்கு குடிநீர் கேட்டு ஒன்றியஆணையரிடம்  கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி திருமலை ரெட்டி பட்டி பகுதி மக்கள்  குடிநீர் கேட்டு ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த  மனுவில் கூறியிருப்பதாவது: சுமார் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  திருமலைரெட்டி பட்டி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அருகில் உள்ள  தலையாரி பட்டியில் அமைக்கப்பட்ட போர்வெல் மூலம் கூடலூர் ஊராட்சி நிர்வாகம்  குடிநீர் வழங்கி வந்தனர். தற்போது போதிய மழை இல்லாமல் தலையாரி பட்டி யில்  அமைக்கப்பட்ட போர்வலில் நீர்மட்டம் குறைந்ததால் போதிய குடிநீர் வரா மல்  இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை
ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த 30நாட்களாக திருமலை ரெட்டிபட்டிக்கு போதிய குடிநீர் கிடை க்காமல் பொதுமக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போதிய குடிநீர் கிடைக்காமல் பள்ளிகள்,  கல்லூரிகள், கூலிவேலை, தனியார் நிறுவனங்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு  செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மணவி கள் குடிநீர் கிடைக்காததால் குறித்த  நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை  ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்க வில்லை. ஆகவே ஒன்றிய நிர்வாகம் உடனடியாக திருமலை ரெட்டிபட்டி  பகுதிக்கு குடிநீர் வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமலைரெட்டிபட்டி பொதுமக்கள் கூறுகையில், கடந்த 30 நாட்களாக குடிநீர் வசதி கேட்டு கோரிக்கை விடுத்து  வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக  திருமலைரெட்டிபட்டி பகுதிக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வில்லை என்றால்  தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.




Tags : Thirumal Reddy ,Commissioner ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...