×

கால்பந்து போட்டி கரிசல் அணி வெற்றி

திண்டுக்கல், ஜன. 23:  திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமையன்று திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் கால்பந்து போட்டி நடந்தது. 4ம் டிவிசனில், பார்வதி கால்பந்து அணிக்கும், கேபிஎஸ் கால்பந்து அணிக்கும் போட்டி நடந்தது. இதில் பார்வதி கால்பந்து அணி வெற்றி பெற்றது.
இதேபோல் 3ம் டிவிசன் போட்டியில் எடுகேர் கால்பந்து அணிக்கும், ஞானம் நினைவு கால்பந்து அணிக்கும் போட்டி நடந்தது. இதில் எடுகேர் கால்பந்து அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையில் எஸ்எம்பிஎம் கால்பந்து அணிக்கும், கொட்டப்பட்டி கால்பந்து அணிக்கும் போட்டி நடந்தது. இதில் 2 அணிகளும் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றன. பின்னர் கரிசல் கால் பந்து அணிக்கும், செவன் ஸ்டார் கால்பந்து அணிக்கும் நடந்த போட்டியில், கரிசல் கால்பந்து அணி வெற்றி பெற்றது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags : Football competition ,
× RELATED கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா