×

மளிகை கடையில் பதுக்கிய 150 கிலோ குட்கா பறிமுதல்: அண்ணன், தம்பி கைது

திருவொற்றியூர், ஜன. 23: திருவொற்றியூர் மாணிக்கம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அந்த மளிகை கடையில் சோதனை நடத்தியபோது அங்கு குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.அங்கிருந்து 150 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கடை உரிமையாளர்கள் நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த சிவபெருமாள்  (28). அவரது தம்பி சிவா (26) ஆகியோரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருவொற்றியூர் மாணிக்கம் நகர் 3வது தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கிய இவர்கள், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி, அதில் குட்கா விற்று வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Tags : brother ,grocery store ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...