×

காயல்பட்டினத்தில் சிறுவர்கள் மாயம்

ஆறுமுகநேரி, ஜன. 23:   காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு காலனியை சேர்ந்தவர் சகாயதேவன். மீனவர். இவரது இளையமகன் ஆலன் ராய்ஸ் (16), 10ம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தைக்கு உறுதுணையாக இருந்துவந்தார்.
இதே போல் இவரது நண்பரும், அதே பகுதியைச் சேர்ந்த இருதயம் மகன் ஆகாஷ் (18) என்பவரும் நேற்று முன்தினம் மாலை 5மணிக்கு கடற்கரைக்கு சென்றனர். பின்னர் திரும்பிவரவே இல்லை. இதுகுறித்து புகாரின் பேரில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் பத்திரகாளி,  எஸ்ஐ மாடசாமி வழக்குப் பதிந்து மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர்.

Tags : boys ,Kayalpattinam ,
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...