×

ஓட்டப்பிடாரம் அருகே பரோலில் வந்த கைதி மாயம்

ஓட்டப்பிடாரம், ஜன. 23:  ஓட்டப்பிடாரம் அருகே பரோலில் வந்தபோது மாயமான ஆயுள் தண்டணை கைதியை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த சாமி மகன் சண்முகையா (45). கடந்த 1985ம் ஆண்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய சரகத்தில் நடந்த கொலை வழக்கில் இவருக்கு 1990ம் ஆண்டு தூத்துக்குடி நீதிமன்றம் ஆயுள் தண்டணை விதித்தது.
இதையடுத்து பாளை மத்திய சிறையில் இருந்து வந்த இவர்,  ஊரில் உள்ள தாயை பார்க்க கடந்த 15ம் தேதி பரோலில் வெளியே வந்தார். மீண்டும் 21ம் தேதி மாலை சிறைக்கு செல்லவேண்டிய சண்முகையா திடீரென மாயமானார். இதுகுறித்து பாளை மத்திய சிறை அலுவலர் தர்மலிங்கம் கொடுத்த தகவலை அடுத்து, மாயமான சண்முகையாவை தேடி கண்டறியுமாறு தூத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து இதுகுறித்து வழக்குப் பதிந்த ஓட்டப்பிடாரம் போலீசார், மாயமான ஆயுள் கைதி சண்முகையாவை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Tags : Prisoner ,Ottapidaram ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்