×

ஓசூரில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்

ஓசூர், ஜன.22:  ஓசூரில், பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றன். தேன்கனிக்கோட்டை அருகே கெம்பத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்துமகன் எட்வின் ஜீவன்குமார். பட்டதாரியான இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகள் சார்லின் பாத்திமா என்பவரும் காதலித்து வந்தனர்.

திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் சார்லின் பாத்திமா எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, பாதுகாப்பு கேட்டு ஓசூர் டிஎஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இதன்பேரில், டிஎஸ்பி மீனாட்சி இருவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்து வருகிறார்.

Tags : Hussein ,Hosur ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு