×

என்ஐடியில் பொங்கல் விழா

திருச்சி, ஜன.22: திருச்சி என்ஐடி.ல் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) பொங்கல் திருவிழா நடந்தது. கல்லூரி தலைமை இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து தப்பாட்டம் வீதி உலா நடந்தது. சிறப்பு விருந்தினராக  கரு.பழனியப்பன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னாள் டிஆர்டிஓ செயலளார் கிருட்டாபர் வாழ்த்தி பேசினார்.கலை நிகழ்ச்சிகளை சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி நடத்தினார். விழாவையொட்டி உறியடி, கபடி, சிலம்பாட்டம், தீச்சிலம்பம் நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் ஆலோசகர் ஜெரோம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Tags : Pongal Festival ,NID ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா