×

பெரம்பலூரில் தனி தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்

பெரம்பலூர், ஜன. 22: பெரம்பலூரில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இதனை கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தே ர்வு 21ம் தேதி(நேற்று) தொடங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று தமிழ், இன்று(22ம் தேதி) ஆங்கிலம், நாளை(23ம் தேதி) கணிதம், 24ம் தேதி அறிவியல், 25ம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் பெரம்பலூரிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கிய தேர்வினை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருளரங்கன், மாவட்ட கல்வி அலு வலர் அம்பிகாபதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேரடியாக எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுத தகுதி பெறுவார்கள்.



Tags : Std Public Examination for Individual Selectors ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி