ஸ்ரீபெரும்புதூர், ஜன.22: குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் லட்சுமி நகர் விரிவு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதியின் பிரதான சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, லட்சுமி நகர் விரிவு பிரதான சாலையை சீரமைக்க ₹25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.இதைதொடர்ந்து, சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி கலந்து கொண்டு சாலை பணியை துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எழுச்சூர் ராமச்சந்திரன், சாலமங்கலம் ராஜமாணிக்கம், செல்வம் உள்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.